Katheeb Caterer

Katheeb Caterer KATHEEB CATERER is the best caterer
We are supply all kinds of Veg. and Nonveg. food for all function in best quality and great taste at lowest price.

_*நாம் சர்வ சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளுக்கு இவ்வளவு அர்த்தமா?*_  *இன்பத்தமிழ்... தொடர்ந்து படியுங்கள்...* 1. *அந்தி, ...
25/09/2022

_*நாம் சர்வ சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளுக்கு இவ்வளவு அர்த்தமா?*_

*இன்பத்தமிழ்... தொடர்ந்து படியுங்கள்...*

1. *அந்தி, சந்தி*:

*அந்தி* : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.

*சந்தி*: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.

2. *அக்குவேர், ஆணிவேர்* :

*அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.

*ஆணி வேர்* : செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.

3. *அரை குறை*:

*அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.

*குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.

4. *அக்கம்,பக்கம்*:

*அக்கம்*: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.

*பக்கம்*: பக்கத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்.

5. *அலுப்பு, சலிப்பு* :

*அலுப்பு*: உடலில் உண்டாகும் வலி.

*சலிப்பு*: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.

6. *ஆட்டம் பாட்டம்* :

*ஆட்டம்* : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.

*பாட்டம்* : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது.

7. *இசகு, பிசகு*:

*இசகு*: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.

*பிசகு*: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.

8. *இடக்கு முடக்கு*:

*இடக்கு* : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.

*முடக்கு* : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல்.

9. *ஏட்டிக்குப் போட்டி* :

*ஏட்டி*: விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்)

*போட்டி* : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது.

10. *ஒட்டு உறவு* :

*ஒட்டு* : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.

*உறவு* : கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.

11. *கடை கண்ணி* :

*கடை*: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்.

*கண்ணி* : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்.

12. *கார சாரம்* :

*காரம்* : உறைப்பு சுவையுள்ளது.

*சாரம்*: காரம் சார்ந்த சுவையுள்ளது.

13. *காடு கரை* :

*காடு* : மேட்டு நிலம் (முல்லை).

*கரை* : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்).

14.*காவும் கழனியும்*:

*கா* : சோலை.

*கழனி*: வயல். (மருதம் ).

15. *கிண்டலும் கேலியும்*:

*கிண்டல்* : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.

*கேலி* : எள்ளி நகைப்பது.

16. *குண்டக்க மண்டக்க* :

*குண்டக்க* : இடுப்புப்பகுதி..

*மண்டக்க*: தலைப் பகுதி,

(சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது எனத் தெரியாமல் தூக்குவது,
வீட்டில் அந்தந்தப் பொருள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது)

17. *கூச்சல் குழப்பம்*:

*கூச்சல்* : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம். (கூ - கூவுதல்)

*குழப்பம்*: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்.

18. *சத்திரம் சாவடி* :

*சத்திரம்* : இலவசமாகச் சோறு போடும் இடம் ( விடுதி ).

*சாவடி*: இலவசமாகத் தங்கும் இடம்.

19.*தோட்டம் துரவு* , *தோப்பு துரவு* :

*தோட்டம்* : செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்.

*தோப்பு* : கூட்டமாக இருக்கும் மரங்கள்.

*துரவு*: கிணறு.

20. *நகை நட்டு* :

*நகை* : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)

*நட்டு* : சிறிய அணிகலன்கள்.

21. *நத்தம் புறம்போக்கு* :

*நத்தம்* : ஊருக்குப் பொதுவான மந்தை...

*புறம்போக்கு* : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.

22. *நேரம் காலம்* :

*நேரம்* : ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.

*காலம்* : ஒரு செயலைச் செய்வதற்கு செய்ய முற்படும் கால அளவு.

23. *நொண்டி நொடம்* :

*நொண்டி* : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.

*நொடம்* : கை, கால் செயலற்று இருப்பவர்.

24. *பற்று பாசம்* :

*பற்று* : நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்.

*பாசம்* : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது...

25. *பழக்கம் வழக்கம்* :

*பழக்கம்* : ஒருவர் ஒரே செயலைப் பல காலமாகச் செய்வது.

*வழக்கம்* : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்துச் செய்வது.

26. *பட்டி தொட்டி* :

*பட்டி*: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்).

*தொட்டி* : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்.

27. *பேரும் புகழும்* :

*பேர்* : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு, பெருமை.

*புகழ்*: வாழ்விற்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.

28. *பழி பாவம்* :

*பழி*: நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்.

*பாவம்* : தீயவை செய்து மறுமையில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி.

29. *பங்கு பாகம்*:

*பங்கு*: கையிருப்பு. பணம், நகை, பாத்திரம்.( அசையும் சொத்து).

*பாகம்* : வீடு, நிலம். அசையாச் சொத்து.

30. *பிள்ளை குட்டி*:

*பிள்ளை* : பெதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்.

*குட்டி*: பெண் குழந்தையைக் குறிக்கும்.

31. *வாட்டம் சாட்டம்* :

*வாட்டம்* : வளமான தோற்றம், வாளிப்பான உடல்.

*சாட்டம்* : வளமுள்ள தோற்றம், தோற்றப்பொலிவு.

ஆரோக்கிய மருத்துவ குறிப்புகள்* கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும், மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம், ந...
01/09/2022

ஆரோக்கிய மருத்துவ குறிப்புகள்

* கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும், மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம், நீரேற்றம் குணமாகும்.

* படர்தாமரைக்கு அருகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

* கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

* சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

* கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

நோய்களை குணப்படுத்தும் சாறுகள்கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.புதினா சாறு – இருமலை குணபடுத்தும். ம...
01/09/2022

நோய்களை குணப்படுத்தும் சாறுகள்

கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

புதினா சாறு – இருமலை குணபடுத்தும். முகப்பருவை நீக்க வல்லது. மற்றும் அனைத்து இரத்த சமந்தமான, வாயு சமந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

துளசி சாறு - சளி மற்றும் சோம்பேரிதனத்தை குறைக்க வல்லது. அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.

வாழைதண்டு சாறு – சிறுநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் எடையை குறைக்கும். ஊளை சதையை குறைக்க உதவும்.

அருகம்புல் சாறு – இது இரத்ததை சுத்தபடுத்தும், வாய் புண் ஆற்றும், மற்றும் தாய்பால் சுரக்க உதவும்.

மாதுளம் பழம்1. மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும்.2. மாதுளம் பழச்சாற்றில் ...
01/09/2022

மாதுளம் பழம்

1. மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும்.

2. மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

3. மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

4. வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

வேப்பிலை தரும் உடல் ஆரோக்கியம்1. வேப்பிலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து தேன் சேர்த்து வாய் கொப்புளிக்க தொண்டைப் புண், தொண்...
01/09/2022

வேப்பிலை தரும் உடல் ஆரோக்கியம்

1. வேப்பிலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து தேன் சேர்த்து வாய் கொப்புளிக்க தொண்டைப் புண், தொண்டைக்கட்டு விலகும். பற்கள் ஆரோக்கியம் பெறும்.

2. நீர் கொப்புளங்கள் ஏற்பட்டபோது வேப்பிலைக் கொழுந்து இலைகளைச் சேகரித்து மைய அரைத்து மேலே பூசுவதனால் கொப்புளங்கள் விரைவில் ஆறிவிடும்.

3. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை ஒரு குடம் நீரில் போட்டு ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூளையும் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த நீரில் உடலுக்கு குளிப்பதால் உடலைப் பற்றிய பூஞ்சக்காளான்கள் பறந்து போவதோடு தோல் நோய்கள் பலவும் தொலைந்து போகும்.

4. வேப்ப இலையை அரைத்து மேற்பூச்சாகப் பூசுவதனால் சொறி, சிரங்கு, படை, தேமல் போன்ற நோய்கள் குணமாகும்.

01/09/2022
*🌾சின்ன சின்ன கை வைத்தியங்கள்🌾** ☘🌿Small in-house treatments 🌿☘*1. ஒரு 30 வினாடிகள்...இரு காது துவாரங்களையும்விரல்களால் ...
01/09/2022

*🌾சின்ன சின்ன கை வைத்தியங்கள்🌾*
* ☘🌿Small in-house treatments 🌿☘*

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.

14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.

15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.

நம்புங்கள் நடக்கும்.....

வாழ்க வளமுடன்.. வளர்க ஆரோக்கிமுடன்..

🌿🌿🌿☘☘☘🌾🌾🌾🌾🌾☘☘☘🌿🌿🌿

Address

Haji Shaik Hussain Street, ICEHOUSE, Royapettah
Chennai
600014

Alerts

Be the first to know and let us send you an email when Katheeb Caterer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Katheeb Caterer:

Share

Category