08/12/2025
சனாதன தர்மம் (Sanatana Dharma) என்பது "நித்திய தர்மம்" அல்லது "நிலையான ஒழுக்கம்/நெறி" என்று பொருள்படும்; இது இந்து மதத்தின் அடிப்படையான, மாறாத ஆன்மீகக் கொள்கைகள், கடமைகள், மற்றும் வாழ்வியல் நெறிகளைக் குறிக்கிறது.
இது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல, மாறாக பிரபஞ்சத்தின் இயற்கையான ஒழுங்கைக் குறிக்கிறது, மேலும் இதுவே இந்து சமயத்தின் பாரம்பரியப் பெயராகவும் கருதப்படுகிறது. இது நீதி, ஒழுக்கம், மற்றும் பிரபஞ்சத்தின் செயல்பாட்டிற்கான தர்ம விதிகளைப் பற்றியதாகும், மேலும் இது மனிதனின் கடமைகளையும், இயற்கையின் சட்டங்களையும் உள்ளடக்கியது.
இதை வேரறுக்க முடியுமா?
விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த சனாதன தர்மத்தை வேரறுப்போம் என கூப்பாடு போட்டு அதற்கு ஒரு கூட்டத்தை நடத்தப் போகிறதாம்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக என கூறிக்கொண்டு இத்தனை காலங்கள் கட்சியை நடத்திவிட்டார்கள்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயம் எனக்கூறிக்கொண்டு அரசாங்க சலுகைகளை பெற்று இன்று சமுதாயத்தில் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்ட ஒரு குடும்பமாவது இனி எங்களுக்கு சலுகைகள் வேண்டாம் என மற்றவர்களுக்காக கொடுத்தது உண்டா இல்லை அதனை இவர்கள் பெற்று கொடுத்திருக்கிறார்களா?
இந்த கட்சியில் பணிபுரியும் தொண்டர்கள் தினமும் வழிபட்டு வரும் பேச்சியம்மன், மாரியம்மன், கருப்பன், ஐயன் ஐயப்பன், ராக்காயி, மூக்காயி என அனைத்து கடவுளும் சனாதன தர்மத்தில் இல்லாதவர்களா?
கட்சி நடத்த எதை வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம் என இருக்கும் இந்த மனப்பான்மை வளர காரணம் யார்?
உண்மை அறிந்தும் அமைதியாக இருக்கும் மக்கள்தானே?
இன்னமும் தன்னை பிற்படுத்தப்பட்டவன் என தனக்குத்தானே கூறிக்கொண்டு முன்னேற மறுக்கும் கூட்டமா இது?
கல்வி அறிவை பெற்றும் சிந்திக்க மறுக்கும் கூட்டமே விழித்திடு. நீ விழித்து விட்டால் உன் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.
உன்னை தாழ்த்தப்பட்டவன் என உன்னை நீயே கூறிக்கொள்ளாதே, வேறொருவருக்கும் அப்படி உன்னை அழைத்திட அனுமதியும் தந்திடாதே.
இது போன்ற ஒரு தனி மனித அரசியல் ஆதாயங்களுக்கு பலி ஆகாதே!
விழித்திடு. விழித்திரு!
#மக்கள் #தமிழகம் #அரசியல் #இந்துமதம் #சனாதனதர்மம்