Sri Varagur Venkatesa Perumal catering Service

Sri Varagur Venkatesa Perumal catering Service 24 hours catering service with updated dishes...

100 percent true and fact.Uma akka oda kadumaiana uzhaippu, endrum enndrum mela mela kutti sellum.Kavalai vendam bala.Fr...
05/04/2025

100 percent true and fact.
Uma akka oda kadumaiana uzhaippu, endrum enndrum mela mela kutti sellum.
Kavalai vendam bala.
From the scratch pad to this level is all bcoz of her hard work dedication hand taste only.
Surely before this Dec.2025 u will get into your own flat in Srirangam.
Write it in a dairy and keep it of my words.
Please place the home name as Uma Illam.
The second iron lady of the earlier house where u where living in Chinthamani.
God's grace it will happen soon.

14/08/2024
ஸ்ரீ வரகூர் வெங்கடேச பெருமாள் கேட்டரிங் ....(TRADITIONAL MADISAR CATERING)...                 9500539702... தாத்தம் தெரு...
26/09/2023

ஸ்ரீ வரகூர் வெங்கடேச பெருமாள் கேட்டரிங் ....(TRADITIONAL MADISAR CATERING)...
9500539702... தாத்தம் தெரு, ஸ்ரீரங்கம், திருச்சி...

தாங்களும் இது போல் நல்ல உணவை , நிம்மதியாகச் சாப்பிட விரும்பினால், தங்களின் உணர்வுகள் சுபத்துவமாகவே இருக்க விரும்பினால் மேலே உள்ள எண்ணிற்கு போன் செய்யுங்கள். சுத்தமான, சுவையான, ஆரோக்கியமான உணவின் அவசியத்தை உணர்ந்திருப்பவர்களானால் நீங்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் கல்யாணம், சீமந்தம், வளைகாப்பு, ஆயுஷ்யஹோமம், 60,80, அப்தபூர்த்தி என்று எதைக் கொண்டாட விரும்பினாலும்...

" உங்களுடன் நாங்கள்...உங்களுக்காகவே நாங்கள்"... அங்கேயே வந்து சமைத்துத் தருகிறோம். ஆயகலைகள் 64 ல் சமையற்கலை என்பது ஒன்று. அதில் பரிமாறுவது என்பது ஒரு தனிக் கலை, அதிலும் நாங்கள் தான் முதல். இது எங்களின் கன்னி முயற்சி....

ஆசீர்வதியுங்கள், நாங்கள் வளர்வோம்...

நண்பர்களே உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம்...சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்...

துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான்...

உணவு சமைக்கும் இடத்தில் கிருஷ்ணரை எப்படி கைது செய்வது என்று கெட்ட விவாதத்துடன் உணவு சமைக்கப்பட்டது...

கிருஷ்ணர் உணவு சாப்பிட மறுத்து நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார்...

அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள்..

கிருஷ்ணர் வந்த மகிழ்ச்சியில் எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள்...

அதை வாங்கி சாப்பிட்ட கிருஷ்ணர் மகிழ்ந்தார்...

இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா நான் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி நீர் ஒரு இலை ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார்...

உள்ளன்புடன் அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் இல்லாத இடத்தில் உணவு சமைக்கப்படவேண்டும்...

சமைக்கும் பொழுது கணவரை குழந்தைகளை நினைத்து வாழ்த்தி, அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்து சமைத்தல் வேண்டும்...

அதுமட்டுமன்றி தெய்வீகமான பாடல்களை கேட்டுக்கொண்டே சமைக்கும் பொழுது அதனுடைய அதிர்வுகள் சமைக்கும் உணவில் உள்ள தண்ணீரினால் உள் வாங்கப்படுகிறது...

இறைவனை நினைத்துக் கொண்டே சமைக்கும் பொழுது, நம்முடைய குடும்பத்தினருக்கு, குழந்தைகளுக்கு இறை உணர்வு உணவின் வழியாக கொடுக்கப்படுகிறது...

அசுத்தமான சூழ்நிலையில் நாம் சுவாசிக்கும் பொழுது , அசுத்தமான தண்ணீர் குடிக்கும் பொழுது ,அசுத்தமான உணவை உண்ணும் பொழுது நம் உடல்நிலை பாதிக்கப்படுகிறது...

அதுபோல் நாம் கோபத்துடன் சமைப்பது, வேண்டாவெறுப்புடன் சமைப்பது, டிவியில் வரும் வன்முறை காட்சிகள், அழுகை காட்சிகள் போன்றவற்றை கேட்டுக்கொண்டு சமைப்பது போன்றவை நம் குடும்பத்தினருக்கு, தேவையில்லாத உணர்வுகளை கொடுக்கிறது...

நம் குடும்பத்தில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள், முரட்டுத்தனமாக நடக்கும் குழந்தைகள், கோபப்படும் கணவர், மாமியார் போன்றவர்கள் நாம் அன்புடன் வாழ்த்தி சமைக்கும் உணவினால், தெய்வீக பாடல்களை கேட்டுக்கொண்டே சமைக்கும் உணவை உண்பதினால், அவர்களுடைய எண்ணங்களில் செயல்களில் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும்...

எனவே அவசர அவசரமாக பரிமாறாமல், டிவி பார்த்துக்கொண்டே பரிமாறாமல், குழந்தைகளும் கணவரும் டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடாமல், அனைவரும் குடும்பமாக ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் பொழுது ஆரோக்கியமான உடல்நிலை மட்டுமல்ல மனநிலை மற்றும் நற்பண்புகள், நற்குணங்கள், தெளிவாக பேசும் தன்மை, தெளிவாக முடிவு எடுக்கும் தன்மை, போன்ற மாற்றங்கள் குடும்பத்தினரிடம் ஏற்படுவதை உணரலாம்...

REVIEW FROM THIRUVONUM SIR FROM COIMBATORE..Balachander Balu Excellent Excellent Vety Nice To See Your Message Sir. Righ...
26/09/2023

REVIEW FROM THIRUVONUM SIR FROM COIMBATORE..
Balachander Balu Excellent Excellent Vety Nice To See Your Message Sir. Right From Beginning, I'm Encouraging You And I'm Also Taking Your Service To My Known Families For Their Fourth Coming Family Functions. Surely You Will Not Get Time Serve To Your Needy Families, Because, Of Tight Busy Schedules. Greetings From Coimbatore.

26/09/2023

REVIEW FROM THIRUVONUM SIR FROM COIMBATORE..
Balachander Balu Excellent Excellent Vety Nice To See Your Message Sir. Right From Beginning, I'm Encouraging You And I'm Also Taking Your Service To My Known Families For Their Fourth Coming Family Functions. Surely You Will Not Get Time Serve To Your Needy Families, Because, Of Tight Busy Schedules. Greetings From Coimbatore.

ப்ராமணா முறைப்படி கல்யாணம் ..சீமந்தம் ...60 & 80 கல்யாணம் ...பூணல் ...வைபவங்களுக்கு கேட்டரிங் சேவை செய்கிறோம் ...மடிசார்...
26/09/2023

ப்ராமணா முறைப்படி கல்யாணம் ..சீமந்தம் ...60 & 80 கல்யாணம் ...பூணல் ...வைபவங்களுக்கு கேட்டரிங் சேவை செய்கிறோம் ...மடிசார் அணிந்து உணவு பரிமாறப்படும் ...... மெஸ் கிடையாது ...தொடங்கும் பொழுது தகவல் தெரிவிக்கிறோம் ....தொடர்புக்கு ...9500539702...9789377062 .. ஸ்ரீ வரகூர் வெங்கடேச பெருமாள் கேட்டரிங் ...

( இது ஒரு விளம்பர பதிவு இல்லை. இதனால் எனக்கு ஒரு கவளம் இலவசமாகக் கிடைக்காது . ஒரு புதிய முயற்சி. பாரம்பர்யத்தைக் காப்பாற்ற ஒரு சின்ன ஆசை. அவ்வளவு தான். Input from sri Balachander Balu Balu ) .

மகாஶ்ரீஶ்ரீ பெரியவா மட்டும் இன்றைக்கு நம்மிடையே இருந்திருந்தால் உண்மையில் பூரித்துப் போயிருப்பார்கள். பிராமணர்கள் வேதகால வாழ்க்கையிலிருந்து சற்று திரும்பி லௌகீக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது, லௌகீக வாழ்வில் ஆசை உண்டானாலும் அதிலும் பாரம்பர்யத்தைக் கடைபிடிக்க சற்று சிரமம் எடுத்துண்டு இதைக் கண்டிப்பாகக் கடைபிடிப்போம் என்று அடம்பிடிக்கும் 'வரகூர் ஶ்ரீவெங்கடேசப் பெருமாள் கேட்டரிங் 'காராளைக் கண்டு நிச்சயம் ஶ்ரீபெரியவா பூரித்துப் போயிருப்பார்கள்.

தலையை அழுந்த வாரி சடை போட்டுண்டு, தலைநிறைய பூ வச்சிண்டு மடிசார் புடவை கட்டிண்டு நம்மாத்திலே ஒரு அரைமணி நேரம் ஸ்திரீகள் வளைய வருவதே துர்லபமாகிவிட்ட இந்த நாளில், திதி நாளில் கூட ஒரு இரண்டு மணி நேரம் பிராமண போஜனம் ஆகிற வரையில் மடிசாரோட இருப்பதை ஒரு தண்டனையா நினைக்கிற பத்னிகள் இருக்கிற கலியுகத்திலே தான் சுமார் ஆறு மணி நேரம் மடிசாரோட இருந்து அன்னம் பரிமாறதுங்கறது ஒரு சில வைராக்யமான ஸ்திரீகளாலே மட்டும் தான் முடியும்.

கேட்டரிங் சர்வீஸ், அதாண்ணா அந்த காலத்து சமயற்காராளுக்கு இங்கிலீசுலே பேரு, செய்யறதுன்னா ஏதோ ஒரு மட்டமான தொழில்னு நினைச்ச காலம் போய் இன்னைக்கு அதுவே ஒரு பணம் கொழிக்கும் தொழிலாயிடுத்து. அப்படி பணம் கொழித்தாலும் கூட சாப்பாடு தயாரிக்கிறவா, அதை பரிமாறுகிறவா , எல்லோருமே நம் பாரம்பர்யத்தை விடாமல் அந்த சர்வீசை நடத்தறதைப் பார்க்கும் போது 'இதுக்குத் தான் ஆசைப் பட்டேன் , வேங்கடவா, நம்மளவாலா இருந்துண்டு சாப்பாடு பரிமாறதுலே கூட கண்ணியமா, பரிமாற மாட்ராளேன்னு' வருத்தத் தோட சாப்பிட்டேன்னு பேர் பண்ணிட்டு கிளம்பரவா கூட இனிமே இருந்து ரசிச்சு சாப்பிட வகை செய்யறமாதிரி ஶ்ரீவெங்கடேஸ்வர கேட்டரிங் சர்வீஸ்காரா அப்படி ஒரு அதிசயம் பண்றாளாம்.

மடிசார் கட்டிண்ட பொம்மனாட்டிகள், அன்ன சுத்தி பண்ணிய தாம்பாளத்திலே அன்னத்தை வாரிண்டு வந்து நம்ம எச்சை இலையிலே அதை வச்சு செத்த ரஸ்ட் எடுக்கிற மாதிரி வச்சு சாதத்தை 'புறங்கையாலே' தள்ற மாதிரி தள்ளி, போதுமா, இன்னும் கொஞ்சம் போடவான்ற உபசரிப்பெல்லாம் இல்லாம, சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிஞ்சோன்ன ரசமா மோரான்னு விசாரிக்காம கூட கையிலே இருக்கிற பதார்த்தத்தை இலையில் கவிழ்த்துட்டு ' யார்டாவன் கேட்டரிங்? எருமை மாடுக்குத் தண்ணி காண்பிக்கிற கணக்கா இலையிலே கொண்டு வந்து சாய்ச்சிட்டுப் போறான்னு' சண்டை போடுவதற்கு வழியே இல்லாமல், நம்மாத்திலே நம்ம அம்மா எப்படி சாதம் போடுவாளோ அப்படியே போடறதுக்குன்னு பரிமாறவாளெல்லாம் பொம்மனாட்டியா போட்டு அவா சிரித்த முகத்தோட ' ரசம் இன்னும் கொஞ்சம் விடட்டுமா? தேவாமிர்தமா இருக்கு'ன்னு சொல்லி நம்மளை உபசரிக்கிற விதத்திலே 'சுகர் ஏறினா ஏறிட்டுப் போறது. நீங்க இன்னும் கொஞ்சம் சாதம் போடுங்கோ'ன்னு கேட்டு வாங்கி சாப்பிடற திருப்தி இருக்கே அதுக்கு ஈடு எதுவுமே ஆகாது.

அந்த திருப்தியைத் தான் வரகூர் ஶ்ரீவெங்கடேஸ்வரா கேட்டரிங் சர்வீஸ்காரா கொடுக்க புதிதா பரிட்சார்த்ததா ஒரு சர்வீஸ் ஆரம்பிக்கப் போறா. கவனிச்சிண்டிருங்கோ . அநேகமா தை பிறந்தோன்ன அறிவிப்பு வரலாம். அவாள் அவாளோட திட்டங்களை விவரிக்க விவரிக்க 'பகவானே, அன்ன தாதா சுகினோ பவந்து' என்று ஆசீர்வாதம் பண்ணிட்டு வந்துட்டேன்.

நீங்களும் உங்கள் தேவைக்கு இவாளை ஏற்பாடு பண்ணிண்டு ஆசீர்வாதம் பண்ணுங்கோ அவாளும் வளரட்டும். நாமும் நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்.

23/09/2023

ப்ராமணா முறைப்படி கல்யாணம் ..சீமந்தம் ...60 & 80 கல்யாணம் ...பூணல் ...வைபவங்களுக்கு கேட்டரிங் சேவை செய்கிறோம் ...மடிசார் அணிந்து உணவு பரிமாறப்படும் ...... மெஸ் கிடையாது ...தொடங்கும் பொழுது தகவல் தெரிவிக்கிறோம் ....தொடர்புக்கு ...9500539702...9789377062 .. ஸ்ரீ வரகூர் வெங்கடேச பெருமாள் கேட்டரிங் ...

( இது ஒரு விளம்பர பதிவு இல்லை. இதனால் எனக்கு ஒரு கவளம் இலவசமாகக் கிடைக்காது . ஒரு புதிய முயற்சி. பாரம்பர்யத்தைக் காப்பாற்ற ஒரு சின்ன ஆசை. அவ்வளவு தான். Input from sri Balachander Balu Balu ) .

மகாஶ்ரீஶ்ரீ பெரியவா மட்டும் இன்றைக்கு நம்மிடையே இருந்திருந்தால் உண்மையில் பூரித்துப் போயிருப்பார்கள். பிராமணர்கள் வேதகால வாழ்க்கையிலிருந்து சற்று திரும்பி லௌகீக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது, லௌகீக வாழ்வில் ஆசை உண்டானாலும் அதிலும் பாரம்பர்யத்தைக் கடைபிடிக்க சற்று சிரமம் எடுத்துண்டு இதைக் கண்டிப்பாகக் கடைபிடிப்போம் என்று அடம்பிடிக்கும் 'வரகூர் ஶ்ரீவெங்கடேசப் பெருமாள் கேட்டரிங் 'காராளைக் கண்டு நிச்சயம் ஶ்ரீபெரியவா பூரித்துப் போயிருப்பார்கள்.

தலையை அழுந்த வாரி சடை போட்டுண்டு, தலைநிறைய பூ வச்சிண்டு மடிசார் புடவை கட்டிண்டு நம்மாத்திலே ஒரு அரைமணி நேரம் ஸ்திரீகள் வளைய வருவதே துர்லபமாகிவிட்ட இந்த நாளில், திதி நாளில் கூட ஒரு இரண்டு மணி நேரம் பிராமண போஜனம் ஆகிற வரையில் மடிசாரோட இருப்பதை ஒரு தண்டனையா நினைக்கிற பத்னிகள் இருக்கிற கலியுகத்திலே தான் சுமார் ஆறு மணி நேரம் மடிசாரோட இருந்து அன்னம் பரிமாறதுங்கறது ஒரு சில வைராக்யமான ஸ்திரீகளாலே மட்டும் தான் முடியும்.

கேட்டரிங் சர்வீஸ், அதாண்ணா அந்த காலத்து சமயற்காராளுக்கு இங்கிலீசுலே பேரு, செய்யறதுன்னா ஏதோ ஒரு மட்டமான தொழில்னு நினைச்ச காலம் போய் இன்னைக்கு அதுவே ஒரு பணம் கொழிக்கும் தொழிலாயிடுத்து. அப்படி பணம் கொழித்தாலும் கூட சாப்பாடு தயாரிக்கிறவா, அதை பரிமாறுகிறவா , எல்லோருமே நம் பாரம்பர்யத்தை விடாமல் அந்த சர்வீசை நடத்தறதைப் பார்க்கும் போது 'இதுக்குத் தான் ஆசைப் பட்டேன் , வேங்கடவா, நம்மளவாலா இருந்துண்டு சாப்பாடு பரிமாறதுலே கூட கண்ணியமா, பரிமாற மாட்ராளேன்னு' வருத்தத் தோட சாப்பிட்டேன்னு பேர் பண்ணிட்டு கிளம்பரவா கூட இனிமே இருந்து ரசிச்சு சாப்பிட வகை செய்யறமாதிரி ஶ்ரீவெங்கடேஸ்வர கேட்டரிங் சர்வீஸ்காரா அப்படி ஒரு அதிசயம் பண்றாளாம்.

மடிசார் கட்டிண்ட பொம்மனாட்டிகள், அன்ன சுத்தி பண்ணிய தாம்பாளத்திலே அன்னத்தை வாரிண்டு வந்து நம்ம எச்சை இலையிலே அதை வச்சு செத்த ரஸ்ட் எடுக்கிற மாதிரி வச்சு சாதத்தை 'புறங்கையாலே' தள்ற மாதிரி தள்ளி, போதுமா, இன்னும் கொஞ்சம் போடவான்ற உபசரிப்பெல்லாம் இல்லாம, சாம்பார் சாதம் சாப்பிட்டு முடிஞ்சோன்ன ரசமா மோரான்னு விசாரிக்காம கூட கையிலே இருக்கிற பதார்த்தத்தை இலையில் கவிழ்த்துட்டு ' யார்டாவன் கேட்டரிங்? எருமை மாடுக்குத் தண்ணி காண்பிக்கிற கணக்கா இலையிலே கொண்டு வந்து சாய்ச்சிட்டுப் போறான்னு' சண்டை போடுவதற்கு வழியே இல்லாமல், நம்மாத்திலே நம்ம அம்மா எப்படி சாதம் போடுவாளோ அப்படியே போடறதுக்குன்னு பரிமாறவாளெல்லாம் பொம்மனாட்டியா போட்டு அவா சிரித்த முகத்தோட ' ரசம் இன்னும் கொஞ்சம் விடட்டுமா? தேவாமிர்தமா இருக்கு'ன்னு சொல்லி நம்மளை உபசரிக்கிற விதத்திலே 'சுகர் ஏறினா ஏறிட்டுப் போறது. நீங்க இன்னும் கொஞ்சம் சாதம் போடுங்கோ'ன்னு கேட்டு வாங்கி சாப்பிடற திருப்தி இருக்கே அதுக்கு ஈடு எதுவுமே ஆகாது.

அந்த திருப்தியைத் தான் வரகூர் ஶ்ரீவெங்கடேஸ்வரா கேட்டரிங் சர்வீஸ்காரா கொடுக்க புதிதா பரிட்சார்த்ததா ஒரு சர்வீஸ் ஆரம்பிக்கப் போறா. கவனிச்சிண்டிருங்கோ . அநேகமா தை பிறந்தோன்ன அறிவிப்பு வரலாம். அவாள் அவாளோட திட்டங்களை விவரிக்க விவரிக்க 'பகவானே, அன்ன தாதா சுகினோ பவந்து' என்று ஆசீர்வாதம் பண்ணிட்டு வந்துட்டேன்.

நீங்களும் உங்கள் தேவைக்கு இவாளை ஏற்பாடு பண்ணிண்டு ஆசீர்வாதம் பண்ணுங்கோ அவாளும் வளரட்டும். நாமும் நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்.

Address

Chennai
620006

Telephone

+919500539702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Varagur Venkatesa Perumal catering Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Varagur Venkatesa Perumal catering Service:

Share

Category