Chennai Book Fair

Chennai Book Fair Official page of Chennai Book Fair organized by THE BOOKSELLERS & PUBLISHERS ASSOCIATION OF SOUTH INDIA (BAPASI)

பன்னாட்டளவில் மிகவும் ஆவலுடன் எதிர்பாக்கப்படும் நிகழ்வு,
சென்னை புத்தகக் காட்சி!

18/09/2025

எதிர்வரும் தினங்களில் நடைபெறவிருக்கும்
மாவட்ட புத்தக திருவிழாக்கள்:

1. திருச்சி: 26.09.2025 முதல் 05.10.2025 வரை
2. வேலூர்: 26.09.2025 முதல் 06.10.2025 வரை
3. தருமபுரி: 26.09.2025 முதல் 05.10.2025 வரை
4. தென்காசி 03.10.2025 முதல் 14.10.2025 வரை
5. புதுக்கோட்டை 03-10-2025 முதல் 13-10-2025 வரை
6. இராணிப்பேட்டை 10.10.2025 முதல் 19.10.2025 வரை
7. விருதுநகர் 24.10.2025 முதல் 03.11.2025 வரை

மதுரை புத்தகத் திருவிழாவில் இன்றைய நிகழ்வுகள்.
08/09/2025

மதுரை புத்தகத் திருவிழாவில் இன்றைய நிகழ்வுகள்.

தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.
07/09/2025

தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.

மதுரை புத்தகத் திருவிழாவில் இன்றைய நிகழ்வு.
07/09/2025

மதுரை புத்தகத் திருவிழாவில் இன்றைய நிகழ்வு.

07/09/2025

பேராசிரியர்கள் ஊன்றிய விதை.

பள்ளிப் பருவதில் எங்கள் ஊரில் உள்ள நூலகத்துக்கு நானும் என் தோழிகளும் சென்று வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு வருவோம். அதுவே என்னை வாசித்தலுக்குத் தூண்டியது. தமிழ் இலக்கியத்தைப் படித்ததால் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கல்கி, ராஜம் கிருஷ்ணன், வைரமுத்து, சிவகாமி போன்ற பல எழுத்தாளர்களின் நூல்கள் பாடத்திட்டத்தின் வழியே எனக்கு அறிமுகமாயின. என்னுடைய பேராசிரியர்கள் பல எழுத்தாளர்களின் நூல்களைப் பரிந்துரைப்பார்கள். அவற்றை எப்படியாவது தேடிப்பிடித்துப் படித்துவிடுவேன்.

என் முனைவர்பட்ட ஆய்வை ஐந்து ஆண்டுகள் மேற்கொண்டேன். அந்நாட்களில் ஒருநாளின் பாதியைப் பல்கலைக்கழக நூலகத்தில்தான் செலவிடுவேன். அப்படித்தான் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பாமரன், பிரபஞ்சன், சாருநிவேதிதா, ராஜ்கௌதமன், நாஞ்சில் நாடன், பெருமாள் முருகன் எனப் பலரது எழுத்துகளையும் வாசிக்கத் தொடங்கினேன்.

ஜெயமோகனின் எழுத்து இன்னும் என் மனதில் அப்படியே ஒடிக்கொண்டிருக்கிறது. தமிழின் முதற்பொருளான நிலம், பொழுது இரண்டையும் அடியொற்றியதாகத்தான் அவரின் 'காடு', 'இரவு' ஆகிய இரண்டு நூல்களையும் பார்க்கிறேன். இவரது 'அனல்காற்றும் இமையத்தின் 'எங்கதெ' நாவலும் ஒரே கதைக்கருவாகவும் இரு வேறுபட்ட முடிவுகளாகவும் எனக்குத் தோன்றின.

தினமும் 40 நிமிடங்கள் பேருந்தில் பயணம் செய்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லவேண்டும். அந்தப் பேருந்துப் பயணங்களின்போது படித்து முடித்த நூல்கள்தான், ராஸலீலா, வானம் வசப்படும், துறவாடைக்குள் மறைந்த காதல் மணம், காலச்சுமை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சூடிய பூ சூடற்க போன்றவை.

என்னுடைய தொடர்வாசிப்பில் முக்கியப் பங்கு 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கும் உண்டு. அரசியல் சார்ந்த எழுத்தாளர்களை இந்நாளிதழ் மூலம்தான் அறிந்துகொண்டேன். இன்றும் என்னுடைய ஆகச்சிறந்த பொழுதுபோக்கு வாசிப்புதான். அதனால்தான் நான் பணிபுரியும் கல்லூரியில் மாணவர்களுக்குப் புதிய பல செய்திகளைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்க முடிகிறது.

செ.அம்பிகாபதி, சேலம்

இந்து தமிழ் திசை நாளிதழ்
பெண் இன்று.
07/09/2025

மதுரை புத்தகத் திருவிழாவில் இன்று.Thamukam Ground
06/09/2025

மதுரை புத்தகத் திருவிழாவில் இன்று.

Thamukam Ground

தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களை சென்னையில் ஒரே இடத்தில் வாசகர்கள் வாங்கிப் பயனுறும் வகையில் மாண்புமிகு தமிழ்நாட...
02/09/2025

தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களை சென்னையில் ஒரே இடத்தில் வாசகர்கள் வாங்கிப் பயனுறும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின் பேரில் சென்னையின் மையப்பகுதியான சென்னை செண்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுமார் 5000 சதுர அடி பரப்பில் நுல் வெளியீட்டு அரங்கம், சிற்றுண்டி நிலையம் அடங்கிய குளிரூட்டப்பட்ட சென்னைப் புத்தகப் பூங்கா தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் உலகத்தரத்தில் உருவாக்கப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் பாடநூல் நிறுவபன் உள்ளிட்ட 14 புகழ்பெற்ற பதிப்பகங்கள் தங்கள் வெளியீடுகளை காட்சிப்படுத்தி விரைவில் மேலும் பல பதிப்பகங்கள் இணைய உள்ளன.

இந்த அழகுறு சென்னைப் புத்தகப் பூங்காவில் மாதந்தோறும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. முதல் நிகழ்வாக எழுத்தாளரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசன் 02. 09. 2025 மாலை 6 மணி அளவில் தொன்மை மறவே எனும் தலைப்பில் உரையாடுகிறார். தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறுகிறது. இந் நிகழ்வின் போது சென்னைப் புத்தகப் பூங்காவில் வாங்கும் புத்தகங்களில் சு. வெங்கடேசன் கையெடுத்திட்டு வழங்குவார்.

மதுரை புத்தகத் திருவிழாவின் முதல் நிகழ்வான “ மாமதுரை வாசிக்கிறது “ நிகழ்வு இன்று மதுரையின் புகழ்மிக்க எழுத்தாணிக்காரத் த...
01/09/2025

மதுரை புத்தகத் திருவிழாவின் முதல் நிகழ்வான “ மாமதுரை வாசிக்கிறது “ நிகழ்வு இன்று மதுரையின் புகழ்மிக்க எழுத்தாணிக்காரத் தெருவிலிருந்து துவங்கியது.

செப்டம்பர் 5 முதல் 15 வரை நடைபெறும் மதுரை புத்தகத் திருவிழாவில் மதுரை மக்கள் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டுகிறோம்.

#மதுரை_புத்தகத்திருவிழா2025

புத்தக இரவலால் மலர்ந்த காதல்!மக்குத் தொழில் கவிதை' என்று கர்வத்தோடு மகாகவி பாரதி முழங்கலாம். 'புத்தகம் என் மூச்சு என்று ...
31/08/2025

புத்தக இரவலால் மலர்ந்த காதல்!

மக்குத் தொழில் கவிதை' என்று கர்வத்தோடு மகாகவி பாரதி முழங்கலாம். 'புத்தகம் என் மூச்சு என்று நான் சொன்னால் கர்வம் தொனிக்குமோ என அஞ்சுகிறேன். இன்றும் யார் வீட்டில் புத்தகத்தைப் பார்த்தாலும் 'படித்துவிட்டுத் தரட்டுமா' என நான் பரபரப்பது நிஜம்.

புத்தகங்கள் எனக்குச் சிறிய வயதிலேயே அறிமுகமாயின. வீட்டின் முதல் தளத்தில் இருந்த புத்தக அலமாரிதான் என் புகலிடம். கடைக்குட்டி என்பதால் நிறைய புத்தகங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. என் சகோதர்கள் வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றபோது வாங்கிவந்த ஆங்கிலப் படக்கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. அதை வாசிக்கத் தெரியாதபோதும் புரட்டிப் பார்த்து மகிழ்ந்தது மறக்கவே இல்லை.

எங்கள் வீட்டின் கீழ்த்தளத்தில் இருந்தவர்களிடம் வாங்கிப் படித்த அம்புலிமாமாவும், வேதாளத்தைத் தோளில் சுமந்தவாறு வாள் ஏந்திய விக்கிரமாதித்யனும் நினைவில் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் 'பிகு செய்துகொண்டு கொடுத்த 'பொன்னியின் செல்வனை ஒரே மூச்சில் வாசித்தது நான் ஏழாவது வகுப்பு படித்தபோது. அப்போது ரசிக்கத் தெரியவில்லை. ஆனாலும் குந்தவை, நந்தினி, பூங்குழலி ஆகியோர் மணியனின் ஓவியங்கள் மூலம் அறிமுகமானார்கள்.

அண்ணனின் அலுவலகத்தில் நூலகம் தொடங்கப்பட்டபோது வார, மாத இதழ்கள் வாங்கும் பொறுப்பு அவருடையது. அவை முதலில் வீட்டிற்கு வரும். பின் அலுவலகத்துக்கு எடுத்துச்செல்வார். அதற்குள் படித்துவிட வேண்டுமென்று நோட்டுபுத்தகத்தில் ஒளித்து வைத்து வாசித்திருக்கிறேன். என் அப்பாவைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். தினமும் மாலை 6-8 படிப்பது கட்டாயம். கோனியம்மன் தேரன்று மட்டும் மின்சாரத் துண்டிப்பால் விலக்கு உண்டு. அப்படி அறிமுகமானவர்கள்தான் கல்கி, சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், சுஜாதா, சிவசங்கரி, லட்சுமி, தமிழ்வாணன், மெரினா, மணியன், வாஸந்தி, இந்துமதி என நீண்ட பட்டியல். அது இன்றும் நீள்கிறது.

எனக்கு வாய்த்தவரும் புத்தகப்பிரியர்தான். அவர்கள் வீட்டிலும் ஏராளமான நாவல்கள் உண்டு. அவற்றை இரவல் வாங்கியதில் உண்டான பழக்கம், இருவரையும் தம்பதி ஆக்கியது! இன்று குடும்பமே வாசிப்பை நேசிக்கிறது.

புத்தகங்களோடு என் பயணம் கதையோ, பாடமோ ஏதோ ஒன்றோடு தொடர்ந்தது.இன்றும் வயதின் காரணமாக புத்தகங்களைப் பராமரிக்க இயலாதபோதும், என் மகள்கள் வாங்கிக் கொடுத்துள்ள Kindle மூலம் வாசிப்புப் பயணம் பற்றாகுறையில்லாமல் தொடர்கிறது. இன்றைய பெற்றோருக்குச் சிறு வேண்டுகோள். குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்களோடு அவர்களை உறவாட விடுங்கள். கற்பனைத் திறன் பெருகும். உலகம் நன்கு புரிந்துகொள்ளப்படும். வாழ்வும் சிறக்கும்.

லதா ரகுபதி.

இந்து தமிழ் திசை நாளிதழின்
பெண் இன்று : 31/08/2025

 #மதுரை
11/08/2025

#மதுரை

நாகப்பட்டிணம் 4ஆவது புத்தகத் திருவிழா 2025 - ஆகஸ்ட் 01  முதல் 11 வரை நாட்கள் நடைபெற உள்ளது.தூத்துக்குடி புத்தகத் திருவிழ...
16/07/2025

நாகப்பட்டிணம் 4ஆவது புத்தகத் திருவிழா
2025 - ஆகஸ்ட் 01 முதல் 11 வரை நாட்கள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி புத்தகத் திருவிழா 2025 -ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறும்.

29/06/2025

வாசிப்பை நேசிப்போம்

கன்னித் தீவு சிறுமி!

குமரி மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம்தான் எங்கள் ஊர். எங்கு பார்த்தாலும் ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும்தான். செருப்பு அணிந்திருந்தால் அவர்கள்தான் பணக்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு ஏழ்மை இருந்தது. ஆனாலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் ஓர் உயர்நிலைப் பள்ளியை உருவாக்கியிருந்தார்கள்.

ஊருக்குத் தெற்கே என் மாமா ஒருவர் அரிசி ஆலை வைத்திருந்தார். என் அம்மா அரிசி வியாபாரம் செய்பவர். தினந்தோறும் அவித்து, காய வைத்த நெல்லைச் தலைச் சுமடாகச் சுமந்து ஆலைக்குக் கொண்டு செல்வார். ஆறாம் வகுப்பு மாணவியான நானும் பல நாட்கள் என் அம்மாவுடன் நெல் சுமந்து செல்வதுண்டு. அங்கு தினத்தந்தி வாங்குவார்கள். தலை சுமடை இறக்கி வைத்ததும் ஓடிச் சென்று நாளிதழைப் படிப்பேன். அதன் இரண்டாம் பக்கத்தில் பிரசுரமாகும் ‘கன்னித்தீவு’ படக்கதைதான் என் வாசிப்பின் ஆரம்பம்.

அதன் பிறகு ஒன்பதாம் வகுப்பு படித்தபோது எங்கள் அறிவியல் அசிரியை திருமணமாகி எங்கள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் குடிவந்தார். அவரது வீட்டில் தினமலர் வாங்குவார்கள். என் வாசிப்பின் அடுத்த கட்டம் ‘சிறுவர் மலருக்கு நகர்ந்தது.

அதன் பிறகு என் அக்காவின் தயவால் ராணிமுத்து, தேவி போன்ற வார இதழ்கள் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தன. அவற்றில் பிரசுரமாகும் சிறுகதைகள், தொடர்கள், துணுக்குகள், கேள்வி பதில்கள் என ஒரு வரி விடாமல் வாசித்துவிடுவேன். ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களை வெட்டி பாடப் புத்தகத்தில் வைத்த அனுபவமும் உண்டு. மேல்நிலைப் பள்ளிக்குள் அடியெடுத்து வைத்தபோது கல்லுரியில் படித்துக் கொண்டிருந்த என் அண்ணன் மூலம் ராஜேஷ்குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகரும் அறிமுகமானார்கள்.

துப்பறிவாளர் பரத்துக்கு நானே அழகிய வடிவம் கொடுத்து கற்பனை நாயகனாக ரசித்த காலம் அது. இப்படியே போய்க்கொண்டிருந்த என் வாசிப்பு, இலக்கியம் சார்ந்த அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த அந்த இனிய நாட்கள் என் பள்ளிப் பருவம் முடிந்த பின் ஆரம்பமானது.

1992இல் எங்கள் ஊருக்கு வந்த கத்தோலிக்க அருட்பணியாளர் அகஸ்டின்தான் நூலகம் வருவதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர். காரங்காடு கிளை நூலகத்தில்தான் பாலகுமாரன், தி.ஜா, சிவசங்கரி, அனுராதாரமணன், கல்கி, சாண்டில்யன், நா.பார்த்தசாரதி எனப் பல இலக்கிய ஆளுமைகளை வாசித்தேன். கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வைரமுத்து போன்றோரின் கவிதைத் தொகுப்புகளை மீண்டும் வாசித்து மனப்பாடம் செய்தபோது, “ஸ்கூல்ல பரீட்சைக்கு இப்படிப் படிச்சிருந்தா மார்க்காவது கூட கிடச்சிருக்கும்” என அம்மா சத்தம் போடுவது இப்போதும் காதில் கேட்பதுபோல் உள்ளது.

திருமணமாகி திருநெல்வேலிக்கு வந்தபின் ஒவ்வொரு வருடமும் என் எதிர்பார்ப்பாக இருப்பது பொருநை புத்தகத் திருவிழாதான். பாடப்புத்தகத்தைத் தாண்டிய உலகையும் என் மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் என் வாசிப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. புதிய புத்தகங்கள் வாங்கும்போது அதன் அட்டையை ஒரு குழந்தையை வருடுவதுபோல் வருடிக் கொடுப்பதில் எனக்கு அலாதி இன்பம்.

- லா. லத்தீஸ், திருநெல்வேலி.

இந்து தமிழ் திசையின்
பெண் இன்று: 29/06/2025

Address

No:8, 2nd Floor, Sun Plaza, G. N. Chetty Road, Chennai/600 006
Chennai
600006

Opening Hours

Monday 10am - 6pm

Telephone

+914428155238

Alerts

Be the first to know and let us send you an email when Chennai Book Fair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chennai Book Fair:

Share