17/03/2025
#துபாயில்_தோப்புத்துறை_முஸ்லிம்_சங்கம்_நடத்திய_பதிமூன்றாம்_ஆண்டு_இஃப்தார்_நிகழ்ச்சி
பர்துபாய் மார்ச் 16, ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் 48 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய பதிமூன்றாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி பர்துபாய் கிராண்ட் எக்ஸல்சியர் ஹோட்டலில் சங்கத்தின் தலைவர் M.S.முஜீபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் தோப்புத்துறை சிறுவர் சிறுமிகள் திருக்குர்ஆன் சூராக்களை மனனம் செய்து ஓதினர்,
சங்கத்தின் செயலாளர் M.S.முகம்மது இஸ்மாயில் அவர்கள் வரவேற்புரையாற்றினார், பின்னர்
Dr,M.சாஜிதா MBBS, அவர்கள் மருத்துவத்தின் பார்வையில் ரமலான் சிறப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார், அதனை தொடர்ந்து
சங்கத்தின் மூத்த உறுப்பினர் பன்னாட்டு தொழிலதிபர் M.சுல்தானுல் ஆரிபீன் அவர்கள், கல்வியின் அவசியமும் அதன் பயன்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்,
இறுதியாக ரமலான் மாத அமல்கள் என்ற தலைப்பில் J.செய்யது அபு ஹக்கீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
மேலும், சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தை பாராட்டியும், சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கியும், குர் ஆனை மனனம் செய்து ஓதிய குழந்தைகளுக்கு நினைவு கோப்பை வழங்கினர், பின்னர் ஜனவரி 2025-ல் நடந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பெண்கள் பகுதியை சிறப்பாக ஒருங்கிணைத்த நான்கு பெண்களுக்கு பரிசுகள் வழங்கியும் கெளரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை சங்கத்தின் காப்பாளர் M.J.அவுலியா முகம்மது அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார், சங்கத்தின் துணைத் தலைவர் N.A. ஹாஜா மொய்தீன் மற்றும் துணை செயலாளர் ARY.அப்துல் ரெஜாக் அவர்களும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
இறுதியாக பொருளாளர் A.ஷாகுல் ஹமீது (Zam Zam) அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இவ்விழாவில் சுமார் 400 க்கும் மேற்பட்ட அமீரக வாழ் தோப்புத்துறைவாசிகள் ஆண்களும், பெண்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.
#தலைவர்_செயலாளர்_மற்றும்_நிர்வாகிகள்
#இப்தார்_குழுவினர்
#தோப்புத்துறை_முஸ்லிம்_சங்கம்_துபாய்